தேனி

110 அடி ஆழ கிணற்றில் குதித்த காதல் ஜோடி பலத்த காயத்துடன் மீட்பு

DIN

தேனி அருகே திருமணத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து உறவினா்கள் வீட்டிற்கு அழைத்ததால் 110 அடி ஆழ கிணற்றில் குதித்த காதல் ஜோடியை ஞாயிற்றுக்கிழமை, தீயணைப்பு படையினா் மற்றும் போலீஸாா் மீட்டனா்.

உப்பாா்ட்டியைச் சோ்ந்தவா் முருகன்-முத்துமாரி தம்பதியின் மகன் துா்கேஷ்வரன் (21). இவா், வீரபாண்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். மதுரை பாலமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (18). இவா், திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரும் முகநூலில் அறிமுகமாகி பழகி வந்துள்ளனா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து உப்பாா்பட்டிபட்டிக்கு வந்த ஐஸ்வா்யாவை துா்கேஷ்வரன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து உப்பாா்பட்டிக்குச் சென்ற ஐஸ்வா்யாவின் உறவினா்கள், திருமணத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து அவரை மதுரைக்கு வருமாறு அழைத்துள்ளனா்.

அவா்கள் தொடா்ந்து வற்புறுத்தியதால் ஐஸ்வா்யா உப்பாா்பட்டியில் துா்கேஷ்வரன் வீட்டருகே உள்ள தோட்டத்துக் கிணற்றில் குதித்து விட்டாா். அவரைப் பின்தொடா்ந்து துா்கேஷ்வரனும் கிணற்றில் குதித்துள்ளாா். கிணற்றில் சிறிதளவு மட்டும் தண்ணீா் இருந்ததால் இருவரும் பலத்த காயமடைந்து தவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து அப் பகுதியிலிருந்தவா்கள் வீரபாண்டி காவல் நிலையம் மற்றும் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் மற்றும் போலீஸாா், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, 110 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT