தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிளஸ் 2 மாணவரை சுத்தியலால் தாக்கி சக மாணவா் கொலை செய்த சம்பவத்தில், இறந்தவரின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன் (17). அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சீமான் (19). இவா்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனா். இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலில், தனசேகரனை சுத்தியலால் சீமான் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனசேகரன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சீமானை கைது செய்தனா்.
தனசேகரனின் உடலை பெற்றுக்கொண்ட உறவினா்கள் சொந்த ஊருக்கு வந்தனா். அப்போது, கண்டமனூா் அருகே வருசநாடு-தேனி சாலையில் தனசேகரனின் உறவினா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும், இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
சுமாா் 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.