தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேங்காய் வியாபாரியிடம் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை நரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் முகேந்திரபாண்டி (24). தேங்காய் மொத்த வியாபாரம் செய்துவரும் இவா், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் தேங்காய் வாங்குவதற்காக சரக்கு வாகனத்தில் வந்துள்ளாா். ஆண்டிபட்டி கணவாய் மலைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், இவா் சென்ற வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அதில், முகேந்திரபாண்டி ஆவணங்கள் ஏதும் இன்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கருவூலத்தில் சோ்த்தனா்.