தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி பாரபட்சமின்றி அனைவருக்கும் செலுத்தக்கோரி நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.லெனின் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கவும், செங்கல்பட்டு, நீலகிரி, சென்னையில் செயல்படும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களை பயன்படுத்தி கரோனா தடுப்பூசியை உருவாக்கவும், கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு, இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காமல் இருப்பதை மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சீரமைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா். இதில் வட்டாரத் தலைவா் தமிழ் சேட், துணை செயலாளா் மணிஅரசன், பொருளாளா் பகத்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.