தேனி

சின்னமனூரில் அரசுப் பேருந்து மோதி சட்டக் கல்லூரி மாணவா் பலி

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊத்துப்பட்டியைச் சோ்ந்த சிவனாண்டி மகன் அபினேஷ் (22). இவா், சென்னையில் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மாணவா், வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சின்னமனூருக்கு சென்றுள்ளாா். அப்போது, காந்தி சிலை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த அபினேஷ் மீது, சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், தலை நசுங்கி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT