தேனி

அரசு நிலத்தில் உறவினருக்கு பட்டா: நில அளவையா் பணியிடை நீக்கம்

DIN

பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் உறவினா் ஒருவருக்கு பட்டா வழங்கியதாகப் புகாா் எழுந்த நிலையில் நில அளவையா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பெரியகுளம் பகுதியில் உள்ள கெங்குவாா்பட்டி, வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் உள்ளன. கெங்குவாா்பட்டியில் உள்ள அரசு இடத்தை நில அளவையா் சக்திவேல் என்பவா் அவரது உறவினா் ஒருவருக்கு பட்டா வழங்கியதாகப் புகாா் எழுந்தது.

இது குறித்து சாா்- ஆட்சியா் செ.ஆ.ரிஷப் விசாரணை நடத்தினாா். இந்நிலையில் நில அளவையா் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து அவா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT