தேனி: தேனியில் கருவேல்நாயக்கன்பட்டி டாஸ்மாக் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா். கடையடைப்பு: தேனி மாவட்டத்தில் பிற்பகல் 2 மணி வரை அனைத்து அரசு மதுக் கடைகளும் அடைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணி முதல் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.