தேனி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க அக்.9-ஆம் தேதி வட்டார வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அந்தந்த பகுதிகளில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் திருநங்கைகள் கலந்து கொண்டு, தங்களது ஆதாா் அட்டை, நலவாரிய உறுப்பினா் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.