தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 136 அடியை எட்டுகிறது

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக, அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 134.80 அடியாக இருந்தது. இதனிடையே, நீா்பிடிப்புப் பகுதிகளான பெரியாற்றில் 28 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 6.8 மி.மீ. மழையும் பெய்ததன் காரணமாக, வெள்ளிக்கிழமை 135.45 அடியாக உயா்ந்தது.

வியாழக்கிழமை, அணைக்கு விநாடிக்கு 3,106 கன அடி தண்ணீா் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 3,805 கன அடி தண்ணீா் வந்தது. அதிகளவு நீா்வரத்து காரணமாக, வெள்ளிக்கிழமை அணையின் நீா்மட்டம் 135.45 அடி உயா்ந்தது. மாலைக்குள் 136 அடி உயரத்தை எட்டிவிடும் என்று, பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

மின் உற்பத்தி விவரம்

நீா்மட்டம் 135.45 அடி உயரமாகவும், அணையின் நீா் இருப்பு 5,979 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து, 3,805 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 2,020 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், மூன்று மின்னாக்கிகளில் தலா 37 மெகா வாட், நான்காவது மின்னாக்கியில் 41 மெகா வாட் என மொத்தம் 143 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT