தேனி

கம்பம் வட்டார தரிசு நில மேம்பாடு திட்டம்: விவசாயிகள் குழு அமைப்பு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் வட்டார பகுதியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்திற்கு விவசாயிகள் குழு தேர்வு செய்யப்பட உள்ளதால் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கம்பம் வட்டாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,  குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் பகுதிகளில் தரிசு நில மேம்பாடு திட்டம் சுமார் 15 ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

8 முதல் 15 எண்ணிக்கையிலான விவசாயிகள் குழுக்களாக   தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு விவசாயிகள் கொண்ட குழுவிற்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி செய்யப்பட்டு, பல்வேறு சாகுபடிகள் செய்ய மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளது. 

கம்பம் வட்டாரத்தில் தரிசு நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கம்பம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT