போடி வட்டாரம், குரங்கனியில் புதன்கிழமை (ஆக.10) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெறும் முகாமில், குரங்கனி மற்றும் சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கலந்து கொண்டு அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், அடிப்படை வசதிகள், கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்சனை ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.