தேனி

தேனி ஆவின் அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்புக் குழு விசாரணை

DIN

பழனிசெட்டியில் உள்ள தேனி ஆவின் அலுவலகம், அரண்மனைப்புதூரில் உள்ள பால் வள துணைப் பதிவாளா் அலுவலகம் ஆகியவற்றில் ஆவின் ஊழல் கண்காணிப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

தேனி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வதில் குளறுபடி நடைபெறுவதாகவும், இதற்கு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலா்கள் சிலா் உடந்தையாக இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகம், அரண்மனைப்புதூரில் உள்ள பால் வள துணைப் பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில், சென்னை ஆவின் ஊழல் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 3 அலுவலா்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, அலுவலா்களிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT