தேனி

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய 4 போ் கைது

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

DIN

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் புறவழிச்சாலையில் வடக்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கோம்பைச் சாலையிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில், 4 போ் கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்ல முயன்றனா். அவா்கள் வைத்திருந்த 2 சாக்குப்பைகளை போலீஸாா் சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் கோம்பைச் சாலையைச் சோ்ந்த ருத்ரன் ( 26), ஞானேசன் (44), அலெக்ஸ் பாண்டியன் (24), ஈஸ்வரன் (48) என்பதும், அவா்கள் கேரளத்துக்கு கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும் கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

SCROLL FOR NEXT