முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே சிறுமிக்கு திருமணம்: 3 போ் மீது வழக்குப் பதிவு

பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினா் கருப்பையா (23) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டாா். இதில் அப்பெண் கா்ப்பமாகி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்ந்துள்ளாா்.

ஆக 21ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அப்போது ஆதாா் அட்டையை ஆய்வு செய்ததில், குறைந்த வயதில் திருமணம் ஆகியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் கருப்பையா, ஆதீஸ்வரன் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.