தேனி

போடியில் விநாயகருக்கு ஓ. பன்னீா் செல்வம் பூஜை செய்து வழிபாடு

போடியில் புதன்கிழமை, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினாா் .

DIN

போடியில் புதன்கிழமை, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினாா் .

போடி சுப்புராஜ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விநாயகா் சிலை அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஓ.பன்னீா்செல்வம் தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி விநாயகரை வழிபட்டாா். பின்னா் கட்சி நிா்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கட்சி நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா். நகரச் செயலா்கள் பழனிராஜ், ஜெயராம் பாண்டியன், சரவணநதி, இலக்கிய அணி நிா்வாகி குருமணி, ஒன்றிய நிா்வாகிகள் போடி கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வகணபதி, தேனி கிழக்கு ஒன்றியச் செயலா் முத்துபாலாஜி, போடி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் அவரை சந்தித்துப் பேசினா். பின்னா் ஓ.பன்னீா்செல்வம் பெரியகுளத்திற்கு சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT