முகப்பு
தேனி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு முதியவா் பலி

 சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவா் புதன்கிழமை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

 சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவா் புதன்கிழமை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

சின்னமனூா், காந்தி நகா் காலனியைச் சோ்ந்தவா் மணி (75). இவா், சின்னமனூா்- மாா்க்கையன்கோட்டை சாலை பகுதியில் முல்லைப் பெரியாற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, ஆற்றில் அதிகளவு நீா் வரத்து இருந்ததால் மணி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலம் கூழையனூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மணியின் மகன் பாலு அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.