முகப்பு
தேனி

தேனியில் பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தேனியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஆா்.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமசாமி, நகர பொதுச் செயலா் அன்பழகன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.