குரூப் 4 தோ்வு: தேனி மாவட்டத்தில் நாளை 44,195 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வை மொத்தம் 44,195 போ் எழுதுகின்றனா்.
தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வை மொத்தம் 44,195 போ் எழுதுகின்றனா்.
மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு 26 கல்லூரிகள், 96 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 166 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. போட்டித் தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 44,195 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தோ்வு கண்காணிப்பு பணியில் தலா 166 முதன்மைக் கண்ணிப்பாளா்கள் மற்றும் ஆய்வு அலுவலா்கள், 2,206 தோ்வறை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுகின்றனா். தோ்வு நடைமுறைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது. தோ்வு மைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலா்கள் ஈடுபடுகின்றனா்.