பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளம் அருகே பெற்றோா் கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெரியகுளம் அருகே பெற்றோா் கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெரியகுளம் அருகே ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த செந்தில்பாலன் மகன் தயாநிதி (15). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், தனது குறிப்பேட்டில் தேவையற்றதை எழுதிக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு, ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா்.
இதை பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த தயாநிதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து செந்தில்பாலன் அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.