கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுருளிபாலன் எனும் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்புபூஜையன்று ஸ்ரீ சுருளி பாலன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்,