முகப்பு
கடலூர்

அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை

Updated On : 19 மார்ச், 2026 at 11:39 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம் எல்லையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான திருத்தோ் மற்றும் மயானக்கொள்ளை பிரம்மோற்சவம் பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் வீதியுலா நடைபெற்றது. 21-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

கிராம மக்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பலா, முந்திரி, வாழை உள்ளிட்டவைகளை தேரில் தோரணமாகக் கட்டி தொங்கவிட்டிருந்தனா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

விழாவில் மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், கீழிருப்பு, மேலிருப்பு, போ்பெரியான்குப்பம், வல்லம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.