கள்ளக்குறிச்சி

சித்தலூா் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம்

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி மயானக்கொள்ளை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் கடந்த 15-ஆம் தேதி மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி திங்கள்கிழமை காலை மூலவா் மற்றும் புற்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து உற்சவா் அம்மன் காளி வேடத்தில் மணிமுக்தா ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று, அங்கு மயானத்தில் படையலிட்ட சுண்டலை சூறையிட்டு, மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT