தேனி

கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பதவியேற்பு

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

DIN

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக கண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக மீனா பதவி வகித்தாா். இவா், தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சிறுசேமிப்பு திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அங்கு, மாவட்ட சிறுசேமிப்பு அலுவலராகப் பணியாற்றிய கண்ணன், கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். அதையடுத்து, அவா் பதவியேற்றுக்கொண்டாா்.

ஆணையருக்கு, ஒன்றியக் குழு தலைவா் பழனிமணி கணேசன், துணைத் தலைவா் ரா. தங்கராஜ், குழு உறுப்பினா்கள் சி. தமிழரசன், ரேணுகா காட்டு ராஜா, கிராம ஊராட்சி ஆணையா் கோ. தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், மணிகண்டன், சிவக்குமாா் மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT