தேனி

கம்பம் பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதம்

DIN

கப்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மின்கசிவு காரணமாக பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம் கம்பம், கம்பம்மெட்டு காலனி அருகே கூடலூரைச் சேர்ந்த காதர்ஒலி(62) என்பவர் சொந்தமான இலவம் பஞ்சு கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில் இன்று மதிய வேளையில் கரும்புகை வெளியேறியது. இதை அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் வீணாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னைகளால் நிறைந்த உலகம்..

அன்னையர் தினம்: மோடிக்கு பரிசளித்த மக்கள்!

பெருமைப்பட வேண்டிய தருணம் -பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும்: யூனிஸ் கான்

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT