தேனி

கம்பம் பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மின்கசிவு காரணமாக பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

DIN

கப்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மின்கசிவு காரணமாக பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம் கம்பம், கம்பம்மெட்டு காலனி அருகே கூடலூரைச் சேர்ந்த காதர்ஒலி(62) என்பவர் சொந்தமான இலவம் பஞ்சு கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில் இன்று மதிய வேளையில் கரும்புகை வெளியேறியது. இதை அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் வீணாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT