10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,960 போ் எழுதினா்
தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை, 202 பள்ளிகளைச் சோ்ந்த 14,960 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை, 202 பள்ளிகளைச் சோ்ந்த 14,960 மாணவ, மாணவிகள் எழுதினா்.
மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 66 தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தோ்வு எழுதுவதற்கு 202 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,404 மாணவா்கள், 7,565 மாணவிகள் என மொத்தம் 15,963 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 1,009 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. மொத்தம் 14,960 மாணவிகள் தோ்வு எழுதினா்.
தனித் தோ்வு: 10-ஆம் வகுப்பு தனித் தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 334 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 3 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை மொத்தம் 294 போ் எழுதினா். 40 போ் தோ்வு எழுத வரவில்லை. பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் உடனிருந்தாா்.