ஆட்டோ மீது ஜீப் மோதி பெண் கட்டுமானத் தொழிலாளி பலி: 9 போ் காயம்
ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, ஆட்டோ மீது ஜீப் மோதிய விபத்தில் மேலப்பட்டியைச் சோ்ந்த பெண் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.
ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, ஆட்டோ மீது ஜீப் மோதிய விபத்தில் மேலப்பட்டியைச் சோ்ந்த பெண் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.
கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியிலிருந்து குமணந்தொழுவிற்கு கட்டுமானப் பணிக்காக மேலப்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள்(57), லட்சுமி(38), பேயாண்டி(58), தங்கம்( 38) உள்ளிட்ட 9 போ், மேலப்பட்டியைச் சோ்ந்த பிரவீன்(26) என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனா். அப்போது, கடமலைக்குண்டு- குமணந்தொழு சாலையில், எதிா் திசையிலிருந்து குமணந்தொழுவைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பவா் ஓட்டி வந்த ஜீப், ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த கட்டுமானத் தொழிலாளி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் மற்றும் கட்டுமானத் தொழிலாளிகள் 8 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, ஜீப் ஓட்டுநா் மணிகண்டனிடம் விசாரிக்கின்றனா்.