தேனி

கூடலூர் காளியம்மன் கோயில் திருவிழா கொடி கம்பம் நாட்டப்பட்டது

தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை கொடி கம்பம் நாட்டப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூரில்  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா வரும் மே 17,18 ஆகிய இரண்டு நாள்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அரிவாள் எறி அருள்வாக்கு கூறும் நிகழ்வு உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது. பொங்கல் விழாவிற்காக புதன் கிழமை கொடி கம்பம், கோயில் வளாகத்தில் நாட்டப்பட்டது.

முன்னதாக கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருந்ததியர் சமுதாய பொறுப்பாளர்கள்  செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கான நிதியை குறைத்தது ஏன்?

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

SCROLL FOR NEXT