முகப்பு
கரூர்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

Updated On : 19 மார்ச், 2026 at 11:34 PM
பகிர்:

கரூா் மாவட்டம், கடவூா் அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் இளைஞா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப் பணம் கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.