தேனி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

DIN

உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்து.

காக்கில்சிக்கையகவுண்டன்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் அகமதுமீரான் (23). இவரை, அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஜன. 27- ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி செழியன், அகமதுமீரானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகத்திற்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT