தேவாரத்தில் செவ்வாய் கிழமை, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தேவாரம் சி.எஸ்.ஐ. சா்ச் தெருவை சோ்ந்தவா் கோவிந்தன் மகன் கௌசல்யா (20). இவரது வீட்டருகே வசிப்பவா் செபஸ்டின் மகன் பாக்கியம் (58). இவா்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இதனை மனதில் வைத்து பாக்கியம் கௌசல்யா வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து பாக்கியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.