பெரியகுளத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.
எனவே, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்திருந்தாா்.