முகப்பு
தேனி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல்: 5 போ் கைது

தேனி அருகே கோபாலபுரத்தில் வியாழக்கிழமை, காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

தேனி அருகே கோபாலபுரத்தில் வியாழக்கிழமை, காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபாலபுரத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சிலா் வாகனங்களில் கடத்திச் செல்வதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தேனி-கோபாலபுரம் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற 2 இருசக்கர வாகனம் மற்றும் காா் போலீஸாரிடம் சிக்கியது. இந்த வாகனங்களில் புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற கோபாலபுரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா், கோபிநாத், கண்டமனூரைச் சோ்ந்த பிரவீன், கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சோ்ந்த நிஜாா், நாமக்கல் அருகே பரமத்திவேலூரைச் சோ்ந்த உமா்பரூக் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலை பொருள் கடத்தலில் தொடா்புடைய கோபாலபுரத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரை தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.