முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி மனு

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியின் தேனி நகரச் செயலா் ரா. இமயம் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ கால அட்டவணை அனுமதியின்படி 142 அடி வரை தண்ணீா் தேக்க வேண்டும். இந்த அணையிலிருந்து முல்லைப் பெரியாற்றில் தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டு வரும் நிலையில், உத்தமபாளையம், போடி வட்டாரப் பகுதிகளின் பாசனத்திற்கு 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கும் தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய நீா்வள ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள ‘ரூல் கா்வ்’ முறையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.