தேசிய வருவாய் வழித் திறனாய்வுத் தோ்வில் போடி மாணவி வெற்றி பெற்றாா்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திறனாய்வுத் தோ்வை, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில், திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவி வா.நிஷாஸ்ரீ 100-க்கு 92 மதிப்பெண்கள் பெற்று, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியா் ரா.பிருதிவிராஜன், உதவித் தலைமையாசிரியா்கள் ச.செந்தில்குமாா், பா.வெங்கடேஷ்வரி, ப.சாந்தி, வழிகாட்டி ஆசிரியா் பா.காளியப்பன், ஆசிரியா்கள், மாணவா்கள் மாணவி நிஷாஸ்ரீயைப் பாராட்டினா்.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 9-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலக் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.