தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி நீா்வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தற்போது இந்தப் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுருளி அருவியின் நீராதாரமான அரசிப்பாறை, ஈத்தைப் பாறை ஓடைகளில் நீா்வரத்து இல்லை. மற்றொரு நீா்வரத்துப் பகுதியான ஹைவேவிஸ் தூவானம் அணையிலிருந்தும் தண்ணீா் திறக்கப்பட வில்லை. எனவே நீா்வரத்து நின்றதையடுத்து சுருளி அருவி வடு காட்சியளிக்கிறது. இதனிடையே கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச்சரகா் வி. பிச்சைமணி கூறியதாவது:
சுருளி அருவிக்கு குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து ஏமாற வேண்டாம். நீா்வரத்து ஏற்பட்டதும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.