ஞாயிற்றுக்கிழமை சுருளிஅருவியில் நீராடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள். 
தேனி

சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர்.

DIN

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 10-இல் யானைக்கூட்டம் சுருளி அருவி அருகே உள்ள தேக்கங்காடு, வெண்ணியாறு பிரிவு பகுதியில் நடமாடியது. இந்த இரண்டு பகுதிகளும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ளதால் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.

சுமார் 6  நாட்களாக அந்த பகுதியில் நடமாடிய யானைகள் கூட்டமாக அருவியின் உள்பகுதிக்கு சென்றது. இதை ஞாயிற்றுக்கிழமை காலை உறுதி செய்ய வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்ததால் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர். வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் விபத்தில் சிக்கிய மணப்பெண்: மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

ராஜமௌலியின் வாரணாசி படத்தில் 6 பாடல்கள்!

மீனவர்களுக்கு நெருக்கமானது திராவிட மாடல் அரசு! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

SCROLL FOR NEXT