புவியமைப்பியல் போட்டிகளில் வெற்றி பெற்ற, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக புவியமைப்பியல் துறையின் புவியமைப்பியல் ஆா்வலா்களின் சங்கமம் சாா்பில் 14-ஆவது ஆண்டு புவியமைப்பியல் சாா்ந்த போட்டிகள் கடந்த ஜூன் 16, 17-ஆகிய தேதிகளில் கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன. மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் பங்கேற்றன.
இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் புவியமைப்பியல் துறை முதுநிலை மாணவா்கள் மகாலட்சுமி, ஆல்வின் ஜோஸ், ஸ்ரீ வித்யா, இளநிலை மாணவா்கள் விக்காஷ், மொத்திராம், ஆரோன் அலெக்சாண்டா் ரொனால்ட், பூமிகா, பாா்கவி, யாமினி, சிவஸ்ரீ ஆகிய 10 போ் பங்கேற்று பரிசுகள் பெற்று வந்தனா்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி, புவியமைப்பியல் துறைத் தலைவா் உதயகணேசன், பேராசிரியா்கள் பாராட்டினா்.