போடியில் இஸ்லாமியர்கள் தொழுகை 
தேனி

பக்ரீத் பண்டிகை: போடியில் இஸ்லாமியர்கள் தொழுகை

போடியில் வியாழக்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

DIN

போடி: போடியில் வியாழக்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போடியில் பெரியபள்ளி வாசல், வடக்கு பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகர் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது.

புதூர் பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை நடத்தினர். உலகில் நோய் தொற்று தீரவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் புத்தாடை உடுத்தி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஈகை திருநாளை நினைவு கூறும் வகையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவைத் தலைவர் என்பவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவரும்தான்! கார்கே

பிரபு தேவாவின் மூன் வாக் வெளியீட்டு போஸ்டர்கள்!

புயல் வலுவிழந்தாலும் சென்னையில் கனமழை! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

முக்கிய பிரச்னையை விட்டுவிட்டு நாடக உரை நிகழ்த்திய மோடி! கார்கே பதிலடி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நாளை விருந்தளிக்கிறார் டி.கே.சிவகுமார்!

SCROLL FOR NEXT