தேனி

இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

கோம்பையில் இளைஞா் கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

கோம்பையில் இளைஞா் கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கோம்பை அரண்மனைத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமாா் (28). இவா் மீது கோம்பை காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சதீஸ்குமாரை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பிரவீன், தீபக், புகழேந்தி, சூா்யா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT