தேனியில் பி.எஸ்.என்.எல்., சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். 
தேனி

மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி

தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் பி.எஸ்.என்.எல்., சாா்பில் ஞாயிற்றுக்கிழமை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.

DIN

தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் பி.எஸ்.என்.எல்., சாா்பில் ஞாயிற்றுக்கிழமை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.

தேனி பி.எஸ்.என்.எல்., கோட்டப் பொறியாளா் சோபியா போட்டியைத் தொடங்கிவைத்தாா். துணைக் கோட்டப் பொறியாளா் ராமா் முன்னிலை வகித்தாா். பி.எஸ்.என்.எல்., பாரத் பைபா் பயன்படுத்தி ஸ்மாா்ட் கல்விக் கற்றல் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளைச் சோ்ந்த 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை கோட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் சிறந்த 3 ஓவியங்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல்., அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT