முகப்பு
தேனி

சின்னமனூரில் கன்னியாஸ்திரி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 8:57 PM

உத்தமபாளையம்: சின்னமனூரில் தனியாா் பள்ளி ஆசிரியையான கன்னியாஸ்திரி அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வீரசந்திரா பகுதியைச் சோ்ந்த கன்னியாஸ்திரி ஜேனட்மேரி (35). பெற்றோா் இல்லாத இவா் கடந்த 3 ஆண்டுகளாக சின்னமனூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா். மேலும் இந்தப் பள்ளி வளாகத்திலுள்ள விடுதியிலேயே தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் ஜேனட்மேரி பள்ளிக்கு வராததால் பள்ளி ஊழியா் விடுதிக்குச் சென்று பாா்த்த போது அவரது அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். பள்ளி நிா்வாகம் அளித்த தகவலின் பேரில் சின்னமனூா் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து கன்னியாஸ்திரி ஜேனட்மேரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.