முகப்பு
தேனி

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 7:32 PM

கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் தனக்கு இருவா் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகாா் அளித்தாா். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவா் என். ராமச்சந்திரன்.

இவா் லோயா்கேம்ப் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது பள்ளி வளாக்தில் அனுமதியின்றி கானகம் அமைப்பதாக தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி செந்தில், பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் திருமாவளவன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.

Advertisement

இது தொடா்பாக இவா்களிடம் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளீா்களா என்று கேட்ட போது யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை எனக் கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

எனவே இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டிருந்தாா். இதே போல, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகாா் செய்தாா். இதுகுறித்து கூடலூா் காவல் ஆய்வாளா் வனிதாமணி விசாரணை நடத்தி வருகிறாா்.