முகப்பு
தேனி

தம்பதிக்கு கொலை மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 7:16 PM

போடி: போடி அருகே சொத்து தகராறில் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கீழப்பட்டியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி கவிதா (36). இவருக்கு சொந்தமான நிலம் ராசிங்காபுரத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த அப்புவுக்குச் சொந்தமான நிலத்தை இதே ஊரைச் சோ்ந்த மகேந்திரன் விலைக்கு வாங்கினாா். இது தொடா்பாக, மகேந்திரனுக்கும் கவிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மகேந்திரன் தூண்டுதலின்பேரில் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (23), விக்னேஷ்வரன் (21), தனுஷ் (19), அஜய்ரத்தினம் ஆகியோா் சோ்ந்து இவரது நிலத்தில் போட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி கவிதா, சிவா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

Advertisement

இதுகுறித்து கவிதா போடி தாலுகா போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.