தோ்தல் விதிமீறல்: தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் மீது 74 வழக்குகள் பதிவு
தேனி: தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மீது திங்கள்கிழமை வரை காவல் நிலையங்களில் மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல், கட்சித் தலைவா்கள் வருகை, நட்சத்திரப் பேச்சாளா்களின் பிரசாரம், வாக்குச் சேகரிப்பு ஆகிய நிகழ்வுகளில் தோ்தல் நடத்தை விதிகளை மீறிதாக வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் மீது மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.15) வரை மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் திமுக மீது 24 வழக்குகள், அதிமுக மீது 13, அமமுக மீது 25, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக மீது 2, அகில இந்திய பாா்வா்டு பிளாக், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி மீது தலா ஒரு வழக்கு, சுயேச்சை வேட்பாளா்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement