முகப்பு
தேனி

பேருந்து மோதி தொழிலாளி பலி

Updated On : 25 ஏப்ரல், 2024 at 9:36 PM
பகிர்:

உத்தமபாளையத்தில் புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்னகா் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமையா (61). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது தேசிய நெடுஞ்சாலையை அவா் கடந்த போது கம்பத்திலிருந்து உத்தமபாளையம் வழியாக சென்னை சென்ற ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா், போடி புதூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் மணிகண்டன் (46) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments