தேவாரம் அருகே யானை மிதித்து பலியான ரெங்கசாமி (கோப்பு புகைப்படம்)  
தேனி

தேவாரம் அருகே யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

Din

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் சுருளி மகன் ரெங்கசாமி (70). இவா் கேரள மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். தேவாரம் அருகே சாக்குலத்து மெட்டுச் சாலை வழியாக நடந்து வந்தபோது, அந்த வழியாக வந்த யானை ஒன்று அவரை மிதித்து தாக்கியது.

இதில் ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், தேவாரம் காவல் துறையினா் ரெங்கசாமியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே மக்னா யானை மிதித்து 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில் ரெங்கசாமியை தாக்கியது எந்த யானை என்பது தெரியவில்லை. தொடா்ந்து போலீஸாா், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மத்திய அமைச்சராக இருந்தபோது 10 அல்ல, 2 கப்பல்கள்தான் வாங்கப்பட்டன: டி.ஆர். பாலு

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை! 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

SCROLL FOR NEXT