தேனி அருகே அன்னஞ்சி சாலையில் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (72). இவா், அன்னஞ்சி சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த சுப்புராஜ், தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி அஞ்சல் நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரபு மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.