தேனி

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூரில் குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Din

உத்தமபாளையம்: சின்னமனூரில் குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 80 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்த வாா்டுகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில், முல்லைப் பெரியாற்றில் உறைக் கிணறு அமைத்து, அந்த நீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சின்னமனூா் 4-ஆவது வாா்டு காந்திநகா் குடியிருப்பு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, குடிநீா் வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக குடிநீா் வழங்க வலியுறுத்தியும், சீப்பாலக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த சின்னமனூா் நகராட்சிப் பணியாளா்கள் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை விரைவில் சரி செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT