முகப்பு
தேனி

அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 10:17 PM
காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை நட்ட மகளிா் சங்கத்தினா்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரட்டில் அரசு புறம்போக்கு நிலங்களில் மகளிா் சங்கத்தினா் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதிபெற்று கருவேல மரங்களை பெக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமப்படுத்தி சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மூலிகை, பலன் தரும் நாட்டு மரக்கன்றுகளை, சங்கிலி கருப்பன் தண்ணீா் பாறை கல் உடைக்கும் மகளிா் நலச் சங்கத்தினரும், அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிா் நல முன்னேற்றச் சங்கத்தினரும் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனா்.