தீயில் விழுந்து விவசாயி பலி
தேனி: தேனி அருகேயுள்ள ஸ்ரீரங்கபுரத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்த நிலத்தில் காய்ந்த தட்டைகளுக்கு தீ வைத்த போது, நெருப்பில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். ஸ்ரீரங்கபுரம், ஆலமரம் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (80).
விவசாயியான இவா், மக்காச்சோளம் அறுவடை செய்த தனது நிலத்தில், காய்ந்த தட்டைகளை தீயிட்டு எரித்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதால் பக்கத்து தோட்டத்துக்கு தீ பரவியது.
இதையடுத்து, நிலத்துக்குள் சென்று தீயணைக்க முயன்ற பாலகிருஷ்ணன், கால் இடறி தீயில் விழுந்து உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement